அதிகரிக்கும் பறவை காய்ச்சல் – ஈரோடு மாவட்ட ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு!
கேரளா மாநிலத்தில் தற்போது பறவைகளுக்கு பறவைகாய்ச்சல் நோய் பரவி வருவதால் அங்கிருந்து பறவைகளை இறக்குமதி செய்ய வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பறவைக்காய்ச்சல்:
பறவைகள் மத்தியில் பரவும் பறவை காய்ச்சல் நோய் அடிக்கடி உறுதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது கேரளா மாநிலத்தில் ஆலப்புழா மாவட்டத்தில் மட்டுமே பறவைகளுக்கு நோய் தாக்குதல் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘எச்5என்1’ வகை அதிக வீரியமிக்க வைரஸ் கிருமிகள் பறவைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
தமிழக பள்ளி கட்டிடங்களுக்கான அனுமதி – உயர் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!
மேலும், பறவை காய்ச்சலானது இறந்த கோழிகளின் மூலமும், கழிவுகள், கோழித்தீவனம் மூலமாக பரவி வருகிறது. இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதனாலேயேரொடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி கோழிப்பண்ணை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டு உள்ளார். அதாவது, பண்ணைகளில் ஏற்படும் இறப்புகளை கால்நடை துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், பண்ணைகளில் பார்வையாளர்களை அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், பண்ணை நடத்துபவர்கள் வேறு பண்ணைகளுக்கும், பறவைகள் சரணாலயத்திற்குள்ளும் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.