தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பால் விலை – தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?
தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தி உள்ளது. இதனை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் நடுத்தர மக்கள் மிகவும் சிரமப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பால் விலை:
இந்தியாவில் கொரோனா காலகட்டத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடைமுறைகளால் நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலைக்கு சென்றது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் விதிக்கப்பட்ட ஊரடங்கு, பொது முடக்கம் போன்ற காரணங்களால் மக்கள் வறுமையில் வாட ஆரம்பித்தனர். மேலும் வேலையின்மை அதிகரிக்கத் தொடங்கியது. இதன் காரணமாக படித்த இளைஞர்கள் வேலையின்றி வீட்டிலேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்த நிலையில் மத்திய அரசு சமீபத்தில் உணவு பொருட்களின் மீது விதித்த வரி விதிப்பால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் நிலவி வரும் விலைவாசி உயர்வால் நடுத்தர மக்கள் உணவு பொருட்கள் வாங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதையடுத்து தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தனியார் பால்நிறுவனம் 1.25 கோடி லிட்டர் பாலை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்து வருகிறது. தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள், தேநீர் கடைகள் மற்றும் வணிகம் சார்ந்த நிறுவனங்கள் அதிகம் தனியார் பாலையே சார்ந்திருக்கின்றன.
PM-Kisan திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு – 12 ஆவது தவணை கிடைப்பதற்கான வழிமுறைகள்
Exams Daily Mobile App Download
இதன் காரணமாக தனியார் பால் நிறுவனங்கள் அடிக்கடி தன்னிச்சையாக பால் விலையை உயர்த்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு முன் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.6 வரை உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி-பிப்ரவரி மாதம் ஒரு முறையும், ஏப்ரல், மே மாதம் ஒருமுறையும் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு தலா ரூ.4 வீதம் உயர்த்தப்பட்டது. தமிழ்நாட்டின் பால் சந்தையில் 84% தனியார் நிறுவனங்களிடம் இருப்பதால் விலை உயர்வால் மக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 14 மாதங்களில் தனியார் பால் விலை 5 முறை உயர்த்தப்பட்டுள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.