தமிழகத்தில் அதிகரித்துள்ள மின் கட்டணம் – முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!

0
தமிழகத்தில் அதிகரித்துள்ள மின் கட்டணம் - முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!
தமிழகத்தில் அதிகரித்துள்ள மின் கட்டணம் – முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!

தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு கடந்த சில நாட்களுக்கு முன்பாக அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து மின் கட்டணம் குறைவாக நிர்ணயிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் விளங்குவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மின் கட்டணம்

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி மின்வாரியம் சார்பில் ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மின் கட்டண உயர்வால் சாமானிய மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என கருதி பொதுமக்களிடம் மின் கட்டண உயர்வு குறித்து கருத்து கேட்ட பிறகு முடிவு செய்யப்படும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு நடைபெற்றது. மேலும் மின் வாரியம் சுமார் ரூ.1.75 லட்சம் கோடி கடனில் இருப்பதால் இந்த மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என மின்வாரியம் தெரிவித்தது.

இதையடுத்து தற்போது மின் கட்டண உயர்வுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி புதிய மின் கட்டணம் தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அமலுக்கு வந்தது. அத்துடன் குடிசை, விசைத்தறி, கைத்தறி, விவசாயம் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழக்கம் போல இலவசமாக அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2 மாதங்களுக்கு 100 யூனிட் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்தினால் 1 யூனிட்டுக்கு ரூ.4.50 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 401 முதல் 500 யூனிட்டுக்கு ரூ.6.00 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் “இனி இவர்களும்” பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Exams Daily Mobile App Download

இந்த மின் கட்டண உயர்வுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இது தொடர்பாக அமைச்சர் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளதாவது, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குறைந்த அளவு மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அத்துடன் கேரளாவை ஒப்பிடும் போது தமிழகம் தான் குறைவான மின் கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 5 ஆண்டுகளை விட மின் தேவை அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். அதனால் மின் உற்பத்தியை விரிவு செய்யும் திட்டங்கள் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!