பொதுத்துறை ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு – மாநில அரசின் முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்டு தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் பொதுத்துறை ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெறும் வயது:
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது முதலில் 58 வயதாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 59 ஆக உயர்த்தப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. பல லட்சக்கணக்கான மக்கள் அரசு வேலைக்காக காத்திருக்கும் வேளையில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரித்து அவர்களின் பணி காலத்தை நீட்டிப்பது கண்டிக்கத்தக்கது என்று கூறப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்த சூழலுக்கு மத்தியில் திமுக தலைமையிலான அரசு கடந்த ஆண்டு அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை மீண்டும் உயர்த்தி 60 ஆக நிர்ணயித்து அரசாணை வெளியிட்டது. தற்போது தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக நடைமுறையில் இருந்து வருகிறது. பெரும்பாலும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 59 மற்றும் 60 ஆகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இனி உங்க மொபைல் எண்ணிற்கு நீங்களே மெஜேஜ் பண்ணாலாம் – WhatsApp-ல் வந்துள்ள புது அப்டேட்!
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் கேரள அரசும், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியுள்ளது. அதாவது கேரளா மாநில பொதுத்துறை ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி நிதி துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது மாநில பொது துறையின் கீழ் பணியாற்றி வருபவர்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.