தமிழகத்தில் மீண்டும் பிசிஆர் பரிசோதனை அதிகரிப்பு – அமைச்சர் விளக்கம்!

0
தமிழகத்தில் மீண்டும் பிசிஆர் பரிசோதனை அதிகரிப்பு - அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் மீண்டும் பிசிஆர் பரிசோதனை அதிகரிப்பு - அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் மீண்டும் பிசிஆர் பரிசோதனை அதிகரிப்பு – அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவலினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. இந்நிலையில் பிசிஆர் பரிசோதனை செய்து கொள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பிசிஆர் பரிசோதனை:

தமிழகத்தில் மீண்டும் கொரோனா நான்காம் அலை பரவல் தீவிரமாக பரவி வருகிறது. அரசு தரப்பில் இருந்து பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வந்தாலும் கூட நாளுக்குநாள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடியே தான் இருந்து வருகிறது. அரசின் தரப்பில் இருந்து பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வந்தாலும் கூட நாளுக்குநாள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடி தான் இருந்து வருகிறது. மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தான் அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

இதனால், அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா படுக்கைகளை ஏற்பாடு செய்து வைக்கும்படி அரசு அறிவித்துள்ளது. இந்த சமயத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து வரும் மாணவ மாணவியர்கள் கட்டாயமாக மாஸ்க் அணிந்து தான் வரவேண்டும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும், மாஸ்க் அணியாமல் பொது இடங்களுக்கு செல்பவர்களுக்கு ஒரு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தலைவலி, காய்ச்சல், இருமல் இவற்றில் ஏதேனும் ஒரு அறிகுறிகள் இருந்தால் கூட உடனடியாக மருத்துவமனையில் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து 2 தவணை கொரோனா தடுப்பூசியையும் பொது மக்கள் கட்டாயமாக போட்டிருக்க வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் பிசிஆர் பரிசோதனை செய்வோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!