தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு? ஜூன் 7 முதல் 10 வரை போராட்டம்!

0
தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு? ஜூன் 7 முதல் 10 வரை போராட்டம்!
தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு? ஜூன் 7 முதல் 10 வரை போராட்டம்!
தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு? ஜூன் 7 முதல் 10 வரை போராட்டம்!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதி அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. அதனால் இதனை கண்டித்து ரேஷன் கடை ஊழியர்கள் வருகிற ஜூன் 7 முதல் 10ம் தேதி வரை சென்னையில் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

அகவிலைப்படி:

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பு பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதனால் அரசுக்கு கூடுதலான செலவினம் ஏற்பட்டது. அதன் காரணமாக அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு வழங்கியது. இதனை தொடர்ந்து மீண்டும் ஜூலையிலும் 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் 31% அகவிலைப்படியை பெற்று வந்தனர். அதனால் தமிழக அரசு ஊழியர்கள் மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். அதன்படி தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 17 சதவிகிதத்தில் இருந்து 31 சதவிகிதமாக அரசு உயர்த்தி வழங்கியது. ஆனால் அதே சமயம் இந்த அகவிலைப்படி உயர்வு ரேஷன் கடை ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. தங்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று நியாயவிலை கடை ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

தமிழகத்தில் வேலை தேடும் இளைஞர்களுக்கு குட் நியூஸ் – தேர்வில்லாமல் ரூ.60000 சம்பளத்தில் அரசு பணி!

இதுவரை இது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் அரசால் எடுக்கப்படவில்லை. அதனால் வருகிற ஜூன் 7 ,8, 9 ஆகிய நாட்களில் ரேஷன் கடை பணியாளர்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். இதில் அகவிலைப்படி உயர்வு உட்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அத்துடன் மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடை பணியாளர்களை ஒன்று திரட்டி வருகிற ஜூன் 10ம் தேதி அன்று சென்னையில் முதலமைச்சரை சந்திப்பதற்காக காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!