அரசு ஊழியர்களுக்கு ஜூலை முதல் அகவிலைப்படி (DA) உயர்வு – 7வது ஊதியக்குழு விவரங்கள்!

13
அரசு ஊழியர்களுக்கு ஜூலை முதல் அகவிலைப்படி (DA) உயர்வு - 7வது ஊதியக்குழு விவரங்கள்!
அரசு ஊழியர்களுக்கு ஜூலை முதல் அகவிலைப்படி (DA) உயர்வு - 7வது ஊதியக்குழு விவரங்கள்!
அரசு ஊழியர்களுக்கு ஜூலை முதல் அகவிலைப்படி (DA) உயர்வு – 7வது ஊதியக்குழு விவரங்கள்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வு வரும் ஜூலை 1ம் தேதி முதல் செலுத்தப்பட உள்ள நிலையில், இது பற்றி 7வது ஊதியக்குழுவின் தகவல்களை காண்போம்.

7வது ஊதியக்குழு:

மத்திய அரசின் 52 லட்சம் ஊழியர்கள் மற்றும் 65 லட்சதிற்கும் மேற்பட்ட ஓய்வூதியம் பெறுவோர்களுக்கு கடந்த 2020 ஜனவரி மாதம் முதல் 3 தவணைகளாக அவர்களின் சலுகைகள் அனைத்தும் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் அனைத்தும் வரும் ஜூலை 1ம் தேதி முதல் ஊழியர்களுக்கு செலுத்தப்படும் என்று மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் அறிவித்துள்ளது. இருப்பினும், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ள சலுகைகள் விவரங்களை குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை.

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வடிவு – ஆளுநர் உறுதி!!

வரும் ஜூன் 26ம் தேதி நடக்க இருக்கும் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் இது குறித்த இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என்று அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. தற்போது மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியானது அடிப்படை ஊதியத்திலிருந்து 17% வரை தற்போது வழங்கப்பட்டு வருகிறது. 2020 ஜனவரி முதல் ஜூன் வரை டிஏவில் 3 %, 2020 ஜூலை முதல் டிசம்பர் வரை 4%, 2021 ஜனவரி முதல் ஜூன் வரை 4% DA இவை மூன்றும் சேர்த்து 11% DA உயர்வு அடையுள்ளது. இதனால் 28% DA உயர்வு ஊழியர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

7 வது ஊதியக்குழு மேட்ரிக்ஸின் படி, ஒரு மத்திய அரசு ஊழியரின் சம்பளம் அடிப்படை சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் பிடிப்பு ஆகிய மூன்று கூறுகளை உள்ளடக்கியது. இதனால் அடிப்படை ஊதியத்துடன் ரூ. 2700 நேரடியாக சேர்க்கப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.32,400 அகவிலைப்படி உயர்வு பெறுவார்கள். DA உயர்வுடன் சேர்ந்து அதனுடன் உள்ள சலுகைகளும் ஜூலை 1ம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

13 COMMENTS

  1. தினமும் DA குறித்த ஆதாரபூர்வமற்ற செய்தியை வெளியிடுவதால் யாருக்கு என்ன லாபம்.

  2. சும்மா பொருளற்ற செய்திகளை திரும்பத்திரும்ப அதையே 3 முறை அறுத்துகடைசியில் ஒன்றுமே இல்லையே. இது ஒரு வேலையில்லாதவர் ஏதோ ஒன்று செய்ய வேண்டும் என பொழுது போக்கி எங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம். வேலையற்ற சோம்பேரி கூட பார்த்து நாக்கை “சப்பு கொட்டுவான்” தயவு செய்து இனிமேல் வேண்டாம். ஒரு மாதத்திற்கு மேல் சென்ற செய்தியைக்கூட திரும்ப சொல்லும்போது ஒரு வரியில் முடிக்கலாம். ராமாயண கூட்டத்திற்கு சென்ற ஒருவர், நான் இப்போது தான் வந்தேன் கதையை முதலில் இருந்து சொல் என்பது போல் அர்த்தமே இல்லாமல் திரும்ப திரும்ப ஆரம்பத்தில் இருந்து செல்லி “ரம்பம் ” போட வேண்டாம். நன்றி வணக்கம்

  3. தயவு கூர்ந்து உறுதியான தகவல்கள் மற்றும் அனுப்பவும்.

  4. இப்படியும் நேரப்போக்கு வேலை செய்ய முடியுமென ஊடகங்கள் முடிவெடுத்து விட்டது 😄

  5. தகவல் தெரியவில்லை என்றால் ஏன் பதிவு செய்ய வேண்டும்

  6. இதை ஏன் பெரிது படுபடுத்துகிறீர்கள்.எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அரசு நிறுவனங்கள் செயல்பட்டுக்கொண்டிருப்பதை ஆளும் கட்சியினர் மறந்து ‌விடக்‌கூடாது. அரசு நிறுவனங்களில் பணியாற்றும் அனைவருக்கும் ‌‌வழங்கப்படும்சம்பளம் ‌‌நாட்டின் பொருளாதார‌ நிலையை உருவாக்கும்.அதைக் கொச்சைப்படுத்தும் விதமாக மக்களை தூண்டக்கூடாது. பெண் அரசு ஊழியர்கள் ‌‌‌‌‌‌‌‌வாரிசுக்கு அரசு பணி‌கட்டாயம் வழங்க வேண்டும். இல்லையென்றால் வாரிசு‌அரசியல் இந்தியாவில் ‌ந டக்கக்கூடாது.பேரிடர்‌காலங்களில் அரசு ‌‌தனியார்‌ இரண்டும்‌ சம்பளத்துடன்‌கூடிய ஓய்வு ‌அ ளிக்க வேண்டும்.அப்படி செயல்பட இயலாத‌தனியார்‌ நிறுவனங்கள் உரிமம் ரத்து‌ செய்யப்பட வேண்டும்.‌ஆளும் கட்சியினர் பதவி விலக வேண்டும். இது தான்‌நாட்டின்‌நலனிற்கு சிறந்தது.

  7. ஏதோ அரசு ஊழியர்களுக்கு வாராவாரம் ஊதிய உயர்வு வந்து கொண்டிருப்பது போன்ற நிலையை தேவை இல்லாமல் கூறிக் கொண்டு பொது மக்களின் கோபத்தை அதிக படுத்தி கொண்டு உள்ளீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!