இந்தியாவில் கடன்களுக்கான வட்டி விகிதம் 0.5% அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
இந்தியாவில் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால், வீடு, வாகன மற்றும் தனி நபர் கடனுக்கான வட்டி விகிதமும் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்டி விகிதம் உயர்வு:
நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை இந்திய ரிசா்வ் வங்கி உயர்த்தி வருகிறது. கடந்த மே மாதத்தில் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4% ஆக இருந்தது. ஆனால், தற்போது ரெப்போ வட்டி விகிதம் 5.4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது, உலக அளவில் பண வீக்கம் அதிகரித்து வருவதால் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக டெபாசிட் விகிதம் 5.15% ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். மேலும், வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதமும் 4.9 சதவீதத்தில் இருந்து 5.4 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் வீடு, வாகன மற்றும் தனி நபர் கடனுக்கான வட்டி விகிதமும் உயரும் என கூறப்படுகிறது.
கனமழையை தொடர்ந்து கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ அலர்ட் – எச்சரிக்கை அறிவிப்பு
மேலும், இந்தியாவில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் கூட இந்திய பொருளாதாரம் மிகவும் வலுவாக இருப்பதால் பொருளாதார தேக்கநிலை ஏற்பட வாய்ப்பில்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார். அதே போல, 2022-23 நிதியாண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 7.2% என்கிற அளவில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்திய பொருளாதாரம் சிறப்பாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.