வங்கிகளில் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்வு? ரிசர்வ் வங்கி விளக்கம்!
இந்திய ரிசர்வ் வங்கி கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.5% உயர்த்தியுள்ளது. இந்த உயர்வை தொடர்ந்து ஐசிஐசிஐ வங்கி உட்பட அனைத்து வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது.
வட்டி விகிதம் உயர்வு:
இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் கூட்டம் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கொள்கை கூட்டத்தில் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்துவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்த தாஸ் தெரிவித்திருந்தார்.அதாவது, கடன்களுக்கான வட்டி வீதத்தை இந்திய ரிசர்வ் வங்கி 0.50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதாவது, FD வட்டி விகிதம் 6.5% முதல் 7% வரையில் 50 அடிப்படை புள்ளிகள் உயர்ந்தால் 5 ஆண்டுகளுக்கான FDல் ரூ.3,436 கூடுதல் வட்டி கிடைக்கும் என கூறப்படுகிறது.
தமிழக மாணவர்களுக்கான ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் – பள்ளிக்கல்விதுறை முக்கிய தகவல்!
மேலும், 93 நாட்களுக்குள் ரெப்போ வட்டி விகிதம் 1.4% உயர்ந்துள்ளது. மேலும், அடுத்த மூன்று காலாண்டுகளில் வட்டி விகிதம் 50-100 bps உயர்வு இருக்கும் என ரிசர்வ் வங்கி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், வைப்பு விகிதம் 8 சதவீதத்தை எட்டுவதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகளவில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்தாண்டின் இறுதிக்குள் ரெப்போ விகிதத்தில் 85bps உயர்வு இருக்கும் என கோடக் மஹிந்திரா வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.
மேலும், ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதை தொடர்ந்து ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பல வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதாவது, ஐசிஐசிஐ வங்கி பெஞ்ச்மார்க் கடன் விகிதத்தை 9.10% ஆக உயர்த்தியுள்ளது. அதே போல பஞ்சாப் நேஷனல் வங்கியும் பெஞ்ச்மார்க் கடன் விகிதத்தை 7.90% ஆக உயர்த்தியுள்ளது. மேலும், ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால் வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் கூடுதல் தவணைத்தொகையை செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.