தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – வலுக்கும் கோரிக்கை! அரசின் முடிவு என்ன?
தமிழகத்தில் மற்ற துறை அரசு ஊழியர்களுக்கு வழங்கியது போல கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று ரேஷன் கடை பணியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
அகவிலைப்படி:
தமிழகத்தில் கடந்த 2021 ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மக்களுக்கு பல்வேறு வகையான வாக்குறுதிகளை அளித்தார். அதன்படி அகவிலைப்படி உயர்வு 2022 ம் ஆண்டு ஜனவரி முதல் வழங்கப்படும் என்று முதல்வர் சட்ட மன்ற மானிய கோரிக்கை விவாதத்தின் போது அறிவித்தார். அதன்படி கடந்த மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்களுக்கு 31% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது. அகவிலைப்படி உயர்வு குறித்த அதிகாரபூர்வ அரசாணையை கடந்த மாதம் அரசு வெளியிட்டது. அதில் 31% வழங்கப்படும் அகவிலைப்படியால் அரசுக்கு ஆண்டுக்கு தோராயமாக 8724 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாணையை தொடர்ந்து அனைத்து அரசு துறைகளிலும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்பட்டது.
ஆனால் இதுவரை கூட்டுறவு துறை ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படவில்லை அரசு பணியாளர்களுக்கு வழங்கும் 31 சதவீத அகவிலைப்படியை போலவே கூட்டுறவு நியாய விலைக் கடை பணியாளர்களுக்கும் அகவிலைப்படி வழங்க கோரி நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.