கலப்பு திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு ஊக்கத்தொகை அதிகரிப்பு – ராஜஸ்தான் அரசு அதிரடி அறிவிப்பு!
ராஜஸ்தான் அரசு சார்பில் வெளியிட்ட அறிவிப்பின் படி கலப்பு திருமணத்திற்கான ஊக்கதொகை ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஊக்கதொகை உயர்வு
ராஜஸ்தான் மாநிலத்தில் சமூக நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்தும் வகையில், அம்மணியை டாக்டர் சவிதா பென் அம்பேத்கர் கலப்புத் திருமணத் திட்டத்தின் கீழ், ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. அதன் பின் கலப்பு திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த தொகையை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் உயர்த்தி இருப்பதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு வரும் ரூ.5 கோடி மதிப்பில் “Boat house” – குஷியில் பொதுமக்கள்!
அதன் படி கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு, ஊக்கத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து, இப்போது ரூ.10 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருத்தப்பட்ட இத்திட்டத்தின் கீழ், எட்டு ஆண்டுகளுக்கு ரூ.5 லட்சம் நிலையான வைப்புத்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரூ.5 லட்சம் புதுமணத் தம்பதிகளுக்கான கூட்டு வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.
Exams Daily Mobile App Download