இந்தியாவில் 35 வகையான பொருட்களின் இறக்குமதி வரி உயர்வு.. 2023-24ம் ஆண்டு பட்ஜெட்டில் வரவுள்ள அறிவிப்பு!

0
இந்தியாவில் 35 வகையான பொருட்களின் இறக்குமதி வரி உயர்வு.. 2023-24ம் ஆண்டு பட்ஜெட்டில் வரவுள்ள அறிவிப்பு!
இந்தியாவில் 35 வகையான பொருட்களின் இறக்குமதி வரி உயர்வு.. 2023-24ம் ஆண்டு பட்ஜெட்டில் வரவுள்ள அறிவிப்பு!
இந்தியாவில் 35 வகையான பொருட்களின் இறக்குமதி வரி உயர்வு.. 2023-24ம் ஆண்டு பட்ஜெட்டில் வரவுள்ள அறிவிப்பு!

இந்தியாவில் 2023 -2024 ஆம் தேதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாளை (பிப். 01) தாக்கல் செய்யபடவுள்ளது. இந்த அறிக்கையில் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் வரி உயர்த்தப்படும் என்று தகவல் வந்துள்ளது.

இறக்குமதி:

நாடாளுமன்றத்தில் 2023 – 2024 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு இன்று தொடங்கியது. இந்த நிகழ்வில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றினார். அதனைத்தொடர்ந்து நாளை (பிப்.01) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பு செய்ய பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோயில்களின் பெயரில் போலி இணையதளம் – உயர்நீதிமன்ற மதுரை கிளையின் அதிரடி உத்தரவு!!

இது 2023ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் தாக்கல் என்பதால் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவ்வப்போது பட்ஜெட் அறிக்கையில் இடம்பெறும் அறிவிப்புகள் குறித்து தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது வரவிருக்கும் பட்ஜெட்டில் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் சுங்க வரி உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது தனியார் ஜெட் விமானங்கள், உயர்தர எலக்ட்ரானிக் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், ஹெலிகாப்டர்கள், நகைகள், காகிதம் மற்றும் வைட்டமின்கள் உள்ளிட்ட 35 வகையான பொருட்களின் சுங்க வரியை அரசு உயர்த்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மேற்கண்ட பொருட்களின் இறக்குமதியை குறைத்து அதன் உற்பத்தி இந்தியாவில் ஊக்குவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!