தமிழகத்தில் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு – தள்ளுவண்டி கடைகள் அதிகரிப்பு!
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மிக அதிக அளவிலான தள்ளுவண்டிகள் மூலம் காய்கறி விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த சேவை மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
தள்ளுவண்டி கடைகள்:
தமிழகத்தில் கடந்த 24ம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. ஊரடங்கு காலத்தில் காய்க்கறி, மளிகை போன்ற அத்தியாவசிய கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால் மக்கள் பாதிப்படையாத வண்ணம் காய்கறி, மளிகை போன்றவற்றினை பொதுமக்கள் இல்லத்திற்கு நேரடியாக தள்ளு வண்டிகள் மூலம் சென்று விற்பனை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியது. மேலும் இதற்கு உள்ளாட்சி அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இதனை தொடர்ந்து தற்போது சென்னையில் நாளுக்கு நாள் தள்ளுவண்டிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி தொடக்கத்தில் 1000 தள்ளு வண்டிகள் மூலம் காய்கறி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது சுமார் 5000திற்கும் அதிகமான வண்டிகள் மூலம் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் வியாபாரிகள் அதிக அளவில் விற்பனை நடைபெறுவதில்லை என்று வருந்துகின்றனர். மேலும் காய்கறிகள் அதிக விலையில் விற்பனை செய்யப்படவில்லை என்று தெரிவித்தனர்.
இன்று தொடங்கும் தென்மேற்கு பருவ மழை – வானிலை ஆய்வு மையம்!!
அதேபோல் கொள்முதல் விலையில் இருந்து ரூ.5 அல்லது ரூ.10 மட்டுமே லாபத்திற்காக கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, ஊரடங்கு நேரத்தில் இதுபோன்ற நடவடிக்கை அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவிகரமாக இருந்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் பொருட்கள் வாங்கும் அளவில் தான் விலை இருக்கிறது. காய்கறி, மளிகை போன்றவை விற்பனை செய்ய தள்ளுவண்டிகளை தமிழக அரசு அனுமதித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தனர்.