இந்தியாவில் குறையுமா பெட்ரோல், டீசல் விலை ? கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு !
எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு ஆகஸ்ட் மாதம் முதல் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அனைத்து நாடுகளிலும் கச்சா எண்ணெய் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
கச்சா எண்ணெய் :
உலக அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இந்த பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரும் நிலையில் எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு நேற்று முக்கிய கலந்தாய்வு கூட்டத்தை நடத்தியது. இதில் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விலை உயர்வு பற்றி விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ரஷ்யாவும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளை விட தற்போது அனைத்து நாடுகளிலும் பெட்ரோல் டீசல் விலை சதம் அடித்துள்ளது.
டெல்டா வைரஸ் தாக்கம் காரணமாக ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – ஆஸ்திரேலியா அரசு!!
இது பொதுமக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. இந்திய போன்ற பெரிய நாடுகளில் கச்சா எண்ணெய் விலை உயர்வு பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு காலங்களில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உச்சத்தை அடைந்து வருகிறது. எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி கூட்டமைப்பு நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை 1 கோடி பேரல் வரையில் குறைத்த அதன் விலையை உயர்த்தியது. அதே போல்
கச்சா எண்ணெய் தேவை அதிகரித்து வருவதால் விலை படிப்படியாக உயர்ந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனை கருத்தில் கொண்டு எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு ஆகஸ்ட் மாதம் முதல் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. மே 2022 முதல் ஐக்கிய அரபு நாடுகள் தினமும் 3.5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சவுதி மற்றும் ரஷ்யா இணைந்து 11.5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய முடிவு எடுக்கப்பட்டு இதற்காகத் தனி ஒப்பந்தத்தையும் செய்துள்ளது.