தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் அதிகரிப்பு – 2ம் அலை தாக்கம்!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டு வருகிறது.
கட்டுப்பாட்டு பகுதிகள்:
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்து வருகிறது. கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. சென்னை, கோவை, தஞ்சாவூர், சேலம், ஈரோடு போன்ற மாவட்டங்களில் முக்கிய வீதிகளில் செயல்படும் கடைகள் இயங்க நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகிறது.
11,250 அடி உயரத்திலிருந்து விழுந்த ஐபோன் X – அடுத்து நடந்த சம்பவம்! விமானி பகிர்ந்த தகவல்!
மேலும் மாவட்டந்தோறும் உள்ள வீதிகளுக்கு சென்று மக்களுக்கு தினசரி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களில் தொற்று பரவல் நிலையை ஆராய்ந்து மாவட்ட ஆட்சியர்கள் கட்டுப்பாடுகளை அதிகரித்தும் தளர்வுகளை அளித்தும் வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
கொரோனா பரவல் அதிகமுள்ள பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு அப்பகுதியில் இருந்து மக்கள் வெளியில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கட்டுப்பாட்டு மண்டலங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 23ம் தேதி வரை 471 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருந்தது. தற்போது மீண்டும் பாதிப்புகள் உயர்வதால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 487 ஆக உயர்ந்துள்ளது.