தமிழக ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. நவம்பர் மாதம் முதல் அமல் – தீர்ப்பை வரவேற்கும் மக்கள்!
சமீப காலமாக அரசு ஊழியர்கள் மத்தியில் பேசுபொருளாக இருப்பது அகவிலைப்படி தான். இந்நிலையில் பணி ஓய்வுபெற்ற போக்குவரத்து துறை ஊழியர்களுக்காக நீதிமன்றம் சமீபத்தில் ஒரு உத்தரவை பிறப்பித்தது.
அகவிலைப்படி உயர்வு:
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏறும் விலைவாசி உயர்வை சமாளிக்கும் வகையில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அரசு அறிவித்து வருகிறது. எனவே அரசு ஊழியர்களுக்கும் இந்த அகவிலைப்படி என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இந்நிலையில் பணியாற்றி ஓய்வுபெற்ற போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கும்படி தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர் பென்சன் நிதி அறக்கட்டளைக்கு சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
மேலும் இந்த அகவிலைப்படி வரும் நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதன் உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஏற்கனவே நீதிமன்றம் பணி ஓய்வுபெற்ற போக்குவரத்து இந்த ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கும்படி 2012 ஆம் வருடம் உத்தரவிட்டிருந்தது.
தீபாவளி போனஸ் உயர்வு? தொழிலாளர் சங்கம் மத்தியில் வலுக்கும் கோரிக்கை!
Exams Daily Mobile App Download
ஆனால், அது நடைமுறைக்கு வரவில்லை. இந்நிலையில் இதுகுறித்து போக்குவரத்து ஊழியர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாக கருத்து தெரிவித்த நீதிமன்றம், ஓய்வுபெற்ற போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படவேண்டும் என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த உத்தரவை போக்குவரத்து துறை ஊழியர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்