2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வருமான வரிச்சட்டத்தில் மாற்றம் – சாமானிய மக்களின் எதிர்பார்ப்பு!
2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணிகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு வரம்பு உயர்வு உள்ளிட்ட பல சலுகைகள் இருக்குமா? என எதிர்பார்க்கப்படுகிறது.
வருமான வரி
நாட்டில் 2023 – 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணிகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. நடப்பாண்டுக்கான பட்ஜெட் வருகிற பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் கொரோனா பரவல், பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக வருமான வரி செலுத்துவோருக்கு பல சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பத்ம விருதுகள் 2023 – 106 பெறுநர்களின் முழு பட்டியல் இதோ!
Follow our Instagram for more Latest Updates
இந்த பட்ஜெட்டில் இதே போன்று நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கு வரிச்ச்சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, வருமான வரி விதிகளின் கீழ், வருமான வரி விலக்கு வரம்பு ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரை என உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, தற்போது அதிகமான வருமான வரி செலுத்துவதற்ககு அரசு சார்பாக 6% வட்டி ரீஃபண்டாக செலுத்தப்படுகிறது.
ஆனால் நீங்கள் தாமதமாக வருமான வரி செலுத்தினால் 12% என இரு மடங்காக செலுத்த வேண்டிய நிலை உள்ளது. மேலும் தாமதமாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்த தேதியிலிருந்து வட்டி செலுத்த வேண்டும். அதன்படி மாதம் 1% வட்டி கணக்கீடு செய்யப்பட்டு ஆண்டுக்கு 12% செலுத்த வேண்டும். அதனால் பட்ஜெட்டில் இது தொடர்பான தளர்வுகள் இருக்கும் என சாமானிய மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.