தமிழக பள்ளி மாணவர்களுக்கான ஊக்கத்தொகை – பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு!
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் இடைநிற்றலை தவிர்ப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஊக்கத்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.
ஊக்கத்தொகை அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள ஒன்றிய ஊராட்சி, நகராட்சி, அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படித்துவரும் மாணவர்களின் நலனுக்காக தமிழக அரசு பலவிதமான நல உதவிகளை செய்து வருகிறது. மேலும், அரசு பள்ளிகளில் மாணவிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருந்ததாலும், மாணவிகளின் இடைநிற்றலை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று மேற்படிப்பு படிக்க நினைக்கும் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
Exams Daily Mobile App Download
அதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டுவிட்டன. அதே போல, அரசு பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்துவதற்காக காலை உணவுத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கூடிய விரைவில் காலை சத்துணவு திட்டமும் நடைமுறைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை குறித்தான அறிவிப்பு ஒன்றை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதாவது, அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களின் இடைநிற்றலை தவிர்ப்பதற்காக ஊக்கத்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. தகுதியான மாணவர்கள் [email protected] என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு வங்கி புத்தகத்தின் நகலினை வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்குள் அனுப்பும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கி சேமிப்பு கணக்கு விவரங்களை வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்குள் EMIS போர்ட்டலில் சென்று பதிவு செய்யும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.