தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை? அரசின் திடீர் அறிவிப்பு!
தமிழக ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வழங்கியுள்ளது. மேலும், ஊக்கத்தொகை வழங்குவதற்கான சில நிபந்தனைகளையும் வெளியிட்டுள்ளது.
ரேஷன் கடை ஊழியர்
தமிழக ரேஷன் கடைகளின் மூலமாக லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் அரிசி, வெல்லம், சர்க்கரை, கோதுமை முதலான அன்றாட தேவை பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக ரேசன் கடைகளில் காதி பொருட்கள், அரசு உப்பு மற்றும் பனைவெல்லம் முதலான கட்டுப்பாடற்ற பொருட்களை விற்பனை செய்யும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கலாம் என அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பான சில நிபந்தனைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை – வானிலை மையம் அறிவிப்பு!
அரசு வெளியிட்டுள்ள இந்த நிபந்தனைகளின்படி தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னையில் உள்ள நியாயவிலை கடைகளில் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும், கிராமப்புறங்களில் உள்ள நியாயவிலை கடைகளில் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யும் ரேஷன் கடை ஊழியர்களுக்கும் தமிழக அரசின் சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், நகர்ப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளில் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யும் ஊழியர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அம்மாதம் வழங்கப்பட வேண்டிய விற்பனை தொகையில் இருந்து ஒரு சதவீதம் ஊக்கத்தொகையாக கூட்டுறவு நிறுவனங்கள் வழங்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.