தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை , பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கைகள்!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை , பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கைகள்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை , பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கைகள்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை , பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கைகள்!

தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின், மாவட்ட மாநாடு பவானி அருகே லட்சுமி நகரில் நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் நுாற்றுக்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியர் பங்கேற்றனர். அப்போது பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து விரைவில் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

வலுக்கும் கோரிக்கைகள்:

தமிழகத்தில் 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள்/ ஆசிரியர்கள் சங்கத்தினர் சார்பில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஏப்ரல் 1ம் தேதி முதல் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்து 18 ஆண்டுகள் நிறைவடைந்தும் கூட அதற்கான விதிகள் இன்னும் முழுமையாக வகுக்கப்படவில்லை. 2004 ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்து கடந்த ஆண்டுகளில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காததால் அவர்கள் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

அரசுப் பணிக்கு சென்றால் இறுதி மூச்சு உள்ளவரை பொருளாதார சிக்கல் இன்றி வாழலாம் என்பது தான் மக்களின் நம்பிக்கை. ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டம் என்பது மக்களின் இந்த நம்பிக்கையையும் தகர்த்து விட்டது. தமிழகத்தில் இந்த நிலை இனியாவது மாற்றப்பட வேண்டும் என பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின், மாவட்ட மாநாடு பவானி அருகே லட்சுமி நகரில் நேற்று நடந்தது. இந்த மாநாட்டிற்கு செயலாளர் லதா தலைமை வகித்தார். இணை செயலாளர் சாந்தா வரவேற்றார். மாநில தலைவர் செந்தாமலர், பொது செயலாளர் உஷாராணி கோரிக்கை குறித்து பேசினர்.

தஞ்சாவூரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – மாதம் ரூ.1 லட்சம் ஊதியம்..!

அப்போது பேசிய அவர், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும். இதை தொடர்ந்து மகப்பேறு இறப்பு சிசு இறப்பு மரணத்தில், கிராம சுகாதார செவிலியர் முழு பொறுப்பாவதை உடனடியாக கைவிட வேண்டும். தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். கொரோனா காலகட்டத்தில் பணியாற்றிய கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன் வைத்து உள்ளனர். இந்த கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவி சாய்த்து விரைவில் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என பேசினார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!