தமிழகத்தில் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

0
தமிழகத்தில் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
தமிழகத்தில் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
தமிழகத்தில் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழகத்தில் முழு நேர முனைவர் படிப்பான (PHD) பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு நலத்துறை சார்பாக ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இது குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

ஊக்கத்தொகை:

தமிழகத்தில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று கல்வி ஊக்கத்தொகை திட்டம். இதன் மூலம் ஏழை எளிய அரசு பள்ளியில் பயில கூடிய மாணவர்கள் இடை நிற்றல் இன்றி கல்வியை தொடர்ந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பழங்குடியினர், பட்டியலினத்தவர்கள், சிறுபான்மையினர் போன்றோர்களுக்கு அரசு சார்பாக மாதந்தோறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வாயிலாக ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 – 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து பழங்குடியினர், பட்டியலின மாணவர்கள் உயர்கல்வி பெறும் நோக்கில் கல்வி உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தற்போது முனைவர் படிப்பான (PHD) நேரடி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 2021 – 22ம் கல்வியாண்டில், பி எச்.டி., படித்த ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் இன மாணவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க விரும்புவோர் www.tn.gov.in/forms/deptname/ என்ற இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.20,000 ஊதியத்தில் புதிய வேலை – தேர்வு கிடையாது..!

இந்த திட்டத்தின் கீழ், மாணவர்கள் விண்ணப்பிக்க, இம்மாதம் 10ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம், தற்போது ஜூலை 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஜூலை 8ம் தேதி மாலை 5.45 மணிக்குள் ஆணையர் ஆதிதிராவிடர் நல ஆணையரகம், எழிலகம் இணைப்பு கட்டிடம், சேப்பாக்கம், சென்னை – 5 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் கடந்த கல்வியாண்டில் உள்ள விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ள இயலாது என்று ஆதிதிராவிடர் நலத்துறை செயலர் மணிவாசன் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!