தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை? புதிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை? புதிய அறிவிப்பு!
தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை? புதிய அறிவிப்பு!
தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை? புதிய அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மளிகைப் பொருள்கள், சோப்பு, பற்பசை உள்ளிட்ட கட்டுப்பாடற்ற பொருள்களின் விற்பனையை அதிகரித்தால் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.

ரேஷன் கடைகள்:

மக்களின் அத்தியாவசிய தேவைகளான சமையல் பொருள்களை மலிவு விலையின் கீழ் வழங்க ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசின் கூட்டுறவு துறையின் கீழ் பல இடங்களில் ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றனர். இதில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை ஆகியவை மலிவு விலையில் வழங்கப்படுகின்றன. மேலும் அரசு வழங்கும் பல நலத்திட்ட நிதியுதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாகவே வழங்கப்படுகின்றன.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மளிகைப் பொருள்கள், சோப்பு, பற்பசை போன்ற கட்டுப்பாடற்ற பொருள்களின் விற்பனையை அதிகரித்து கூட்டுறவு நிறுவனங்களை வளம்பெறச் செய்ய ஏதுவாக, விற்பனையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும்படி தமிழ்நாடு விநியோக ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

அதில் ஊட்டி டீ, காதி பொருள்கள் மற்றும் அரசு நிறுவனங்களால் வழங்கப்படும் இதர பொருள்களான பனை வெல்லம், சிறு தானியங்கள் ஆகியவற்றின் விளிம்புத்தொகை குறைவாக உள்ளதால், அவற்றின் விற்பனைக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டியதில்லை. மேலும் இந்த பொருள்களை தவிர மற்ற கட்டுப்பாடற்ற பொருள்களை ரேஷன் கடைகளில் விற்பனை செய்யும்போது, விற்பனையாளர்களுக்கு நிபந்தனைக்கு உட்பட்டு ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊக்கத்தொகை பெற சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் 50 ஆயிரத்துக்கு அதிகமாகவும், கிராமப்புற கடைகளில் 25 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் விற்பனை செய்யப்பட வேண்டும். இந்த விற்பனையில், 10 சதவீதம் மற்றும் அதற்கு மேல் விளிம்புத்தொகை உள்ள கட்டப்பாடற்ற பொருள்களின் விற்பனையை மட்டும் ஊக்கத்தொகை கணக்கீட்டுக்கு எடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு விதிகளை பூர்த்தி செய்யும் விற்பனையாளர்களுக்கு அந்த மாதம் செலுத்தப்படும் விற்பனை தொகையில், ஒரு சதவீதம் ஊக்கத்தொகை மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் கூட்டுறவு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!