தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை – அரசு புதிய ஏற்பாடு!
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் இடைநிற்றலை தவிர்ப்பதற்காக, கல்வி ஊக்கத்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஊக்கத்தொகை:
தமிழகத்தில் பயிலும் மாணவ, மாணவியர்களின் இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, ஒன்றிய ஊராட்சி, நகராட்சி, அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படித்து வரும் மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தும் நோக்கிலும் சில சலுகைகள் வழங்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
அதாவது, அரசு பள்ளிகளிலேயே 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பு படிக்க நினைக்கும் மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அந்த மாணவி மேற்படிப்பை முடிக்கும் வரைக்கும் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 உதவித்தொகை மாணவியின் வங்கி கணக்கிற்கே அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்திற்காக எக்கச்சக்கமான மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இது மட்டுமல்லாமல் 1 முதல் 5 ஆம் வரையிலான மாணவர்களுக்கு இடைநிற்றலை தவிர்ப்பதற்கு காலை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அதே போல, அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களின் இடைநிற்றலை தவிர்ப்பதற்காகவும் கல்வி ஊக்கத்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கல்வி ஊக்கத்தொகையை பெற தகுதியும் விருப்பமும் பெற்ற மாணவர்கள் [email protected] என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு மாணவரின் வங்கி புத்தகத்தின் நகலினை அனுப்பும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வங்கி நகலினை அனுப்ப ஆகஸ்ட் 16 தான் கடைசி நாள் என்பதால் அதற்குள் அனுப்பும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கி சேமிப்பு கணக்கு விவரங்களை வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்குள் EMIS போர்ட்டலில் சென்று பதிவு செய்யும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.