தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கான ஊக்கத்தொகை திட்டம் – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி போன்ற மற்ற விவரங்கள் குறித்து இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திறனறி தேர்வு:
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இதனை அடுத்து தேர்வு முடிவுகள் வெளியாகி அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தமிழக அரசு மாணவர்களுக்கு கொரோனா கால இடைவெளியினால் ஏற்பட்ட கற்றல் குறைவை சரி செய்யும் விதமாக புதிய கல்வி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் மாணவர்களுக்கு பல வகையான போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தி உற்சாகப்படுத்தி வருகின்றன.
பள்ளி மாணவ, மாணவிகள் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாட் தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதை போன்று தமிழ் மொழியில் இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் 2022-23-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. இந்த தேர்வில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளி கல்வித்துறை சார்பாக மாதம் ரூ. 1500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வில் 50% அரசு பள்ளி மாணவர்களும் மீதமுள்ள 50% அரசு பள்ளி மாணவர்கள் உட்பட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழகத்தில் குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல்களை குறைக்க புதிய திட்டம் – கல்வித்துறை அதிரடி!
Exams Daily Mobile App Download
தமிழக அரசின் 10ம் வகுப்பு தர நிலையில் உள்ள தமிழ் பாடத்திட்டத்தின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் உள்ள 2022-23-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும் (சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. உட்பட) பதினோராம் வகுப்பு மாணவர்கள் வருகிற அக்டோபர் 1ம் தேதி நடைபெறும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு மாணவர்கள் அவர்கள் படிக்கும் பள்ளிகள் மூலமாகவே விண்ணப்பிக்க முடியும். எனவே மாணவர்கள் இந்த தேர்விற்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வருகிற 22-ந் தேதி முதல் அடுத்த மாதம் செப்டம்பர் 9ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டண தொகை ரூ. 50 யை சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 9ம் தேதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்