ஆகஸ்ட் 31 வரை இரவு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

0
ஆகஸ்ட் 31 வரை இரவு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!
ஆகஸ்ட் 31 வரை இரவு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!
ஆகஸ்ட் 31 வரை இரவு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

திரிபுரா மாநிலத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை கொரோனா இரவு ஊரடங்கு இரவு 7 மணி முதல் காலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும், அரசின் கட்டுப்பாடுகளையும் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் திரிபுரா மாநில தலைமை செயலகம் உத்தரவிட்டுள்ளது.

இரவு ஊரடங்கு நீட்டிப்பு:

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ம் அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியதால் நோய் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து மாநிலங்களிலும் முன்னதாக இரவு ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதன்பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் தீவிர கட்டுப்பாடுகளினால் தொற்று ஒரு சில இடங்களை தவிர மற்ற இடங்களில் கட்டுக்குள் வந்தது.

அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

திரிபுரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள காரணத்தால் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், மாநிலம் முழுவதுமான இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் இரவு 7 மணி முதல் காலை 5 மணி வரை ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது. மேலும் மக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ஊரடங்கு கட்டுப்பாடுகள்:

  • கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் திறந்த வெளியில் அதிகபட்சம் 100 பேர்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம். மூடிய அரங்குகளில் அதிகபட்சம் 30% மக்களுடன் நிகழ்ச்சிகள் நடக்கலாம்.
  • மல்டிபிளெக்ஸ், ஜிம்னாசியம் / நீச்சல் குளம், விளையாட்டு வளாகங்கள் & ஸ்டேடியம், பொழுதுபோக்கு பூங்காக்கள், பார்கள் போன்றவை 30% திறனுடன் திறக்கப்படலாம்.
  • மால்கள், அழகு நிலையங்கள், முடிதிருத்தும் கடைகள் காலை முதல் மாலை 6 மணி வரை திறக்கலாம்.
  • உணவகங்கள் / தபாக்கள் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்கும்.
  • அனைத்து அரசு மற்றும் அரசு சாரா அலுவலகங்களும் 100% ஊழியர்களுடன் காலை 10 மணி முதல் மாலை 4:30 மணி வரை செயல்பட வேண்டும்.
  • மக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்ல கூடாது.
  • திருமண நிகழ்ச்சிகள் அதிகபட்சம் 50 நபர்களுடன் அனுமதிக்கப்படும்.
  • இறுதி சடங்குகளில் 20 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அனுமதி இல்லை.
  • அனைத்து மத வழிபாட்டு தளங்களும் திறந்திருக்கும்.
  • அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!