தமிழகத்தில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழக முதல்வர் நாளை சென்னையில் இருந்து புறப்பட்டு பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். இவரது வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கருதி அம்மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
டிரோன்கள் பறக்க தடை:
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவில் அமையவுள்ள சிப்காட் தொழில் பூங்கா அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு அவர் நாளை (நவ.28) காலை சென்னையில் இருந்து விமான மூலம் புறப்பட்டு திருச்சி வரவுள்ளார். அங்கு ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற இருக்கும் அறிவியல் நிகழ்ச்சியை துவக்கி வைக்கவுள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை – இவ்வளவு நாள் மிஸ் பண்ணியாச்சு பா!
பிறகு அங்கிருந்து புறப்பட்டு பெரம்பலூர் செல்ல உள்ளார். அங்கு பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டம் இணைந்து நடத்தும் அரசு விழாவிலும் பங்கேற்க உள்ளார். மேலும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். அத்துடன் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதனால் முதல்வரின் வருகையை முன்னிட்டு பெரம்பலூரில் பாதுகாப்பு கருதி பெரம்பலூர் மாவட்டத்தில் நவம்பர் 28, 29 ஆகிய இரு நாட்களும் டிரோன்கள் பறக்க அம்மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். இந்த நிகழ்ச்சியை முடித்த பிறகு முதல்வர் நவ.29ம் தேதி காலை 10.45 மணி அளவில் புறப்பட்டு பெரம்பலூர் வழியாக கார் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.