தமிழகத்தில் ஒரே நாளில் 24,898 பேருக்கு கொரோனா – 195 பேர் உயிரிழப்பு!!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் தமிழகம் புதிய உச்சத்தை அடைந்து உள்ளது.
கொரோனா பாதிப்புகள்:
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிக வேகத்தில் பரவி வருகிறது. தொற்றை கட்டுப்படுத்த அரசு பல தீவிர நடவடிக்கைகளை அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் ஒரே நாளில் 4 லட்சம் பேர் தொற்றினால் பாதிக்கப்ட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர மற்றும், வார இறுதி நாள் ஊரடங்கும் அமலில் இருந்து வருகிறது.
அன்பில் மகேஷ் முதல் சிவி கணேசன் வரை – ஸ்டாலின் அமைச்சரவையில் 15 புதுமுகங்கள்!!
இருப்பினும் தொற்றின் பாதிப்புகள் குறையாத காரணத்தால் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 24,898 பேர் தொற்றினால் புதிதாக பாதிக்கப்ட்டுள்ளனர். மேலும், 195 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,97,500 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் 6,678 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 21,546 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 1,31,468 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,34,141 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 14,947 பேர் கொரோனாவினால் பலியாகியுள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்