தமிழகத்தில் ஒரே நாளில் 6,711 பேருக்கு கொரோனா – 19 பேர் உயிரிழப்பு!!

0
தமிழகத்தில் ஒரே நாளில் 6,711 பேருக்கு கொரோனா - 19 பேர் உயிரிழப்பு!!
தமிழகத்தில் ஒரே நாளில் 6,711 பேருக்கு கொரோனா - 19 பேர் உயிரிழப்பு!!
தமிழகத்தில் ஒரே நாளில் 6,711 பேருக்கு கொரோனா – 19 பேர் உயிரிழப்பு!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,000க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 19 நபர்கள் மரணமடைந்து இருப்பதும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா இரண்டாம் அலை:

தமிழகத்தில் கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா தொற்றின் தாக்கம் தற்போது வரை நீண்டு கொண்டு இருக்கிறது. இடையில் சில மாதங்கள் நோய் பரவல் கட்டுக்குள் வந்தாலும் தற்போது மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏப்ரல் 10ம் தேதி முதல் தமிழக அரசு புதிய நோய் தடுப்பு வழிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் அறிவித்து உள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – முதல்வர் வெளியீடு!!

பாதிப்பு எண்ணிக்கை:

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 6,711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,40,145 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 2,105, செங்கல்பட்டில் 611, கோவையில் 604, திருவள்ளூரில் 333, காஞ்சிபுரத்தில் 277 மற்றும் திருப்பூரில் 160 பேருக்கு அதிகபட்சமாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 19 பேர் உயிழந்து உள்ளனர். இதனால் தற்போது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 12,927 ஆக அதிகரித்துள்ளது. தொற்றின் பாதிப்பில் இருந்து 2,339 பேர் குணமடைந்து உள்ளனர். மேலும், தற்போது மருத்துவமனைகளில் 46,308 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 82,982 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!