தமிழகத்தில் நாளை ‘இந்த’ மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு – மின்வாரியம் தகவல்!

0
தமிழகத்தில் நாளை 'இந்த' மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு - மின்வாரியம் தகவல்!
தமிழகத்தில் நாளை 'இந்த' மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு - மின்வாரியம் தகவல்!
தமிழகத்தில் நாளை ‘இந்த’ மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு – மின்வாரியம் தகவல்!

மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் மு.ராஜா காந்தி தெரிவித்துள்ளார்.

மின்தடை:

இந்தியாவில் மின்சாரம் என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏனென்றால் மின்சாரம் இல்லாமல் எந்த ஒரு வேலையும் நடைபெறாது. அதாவது வீடு முதல் பள்ளி, கல்லூரி, வேலைபார்க்கும் நிறுவனங்கள் என கணக்கிலடங்காத துறைகளுக்கு மின்சாரம் இன்றியமையாத தேவையாக உள்ளது. இவை எல்லாவற்றையும் விட விவசாயத்திற்கு மிகவும் முக்கியமானதாக மின்சாரம் உள்ளது. அதாவது மின் இணைப்பு மூலம் நீர் விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்தியாவில் அனைத்து துறைகளுக்கும் மின்சாரம் முக்கியமான காரணியாகும்.

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு துணை மின் நிலையங்கள் வாயிலாக மின் விநியோகம் செய்யப்படுகிறது. இத்தகைய துணை மின் நிலையங்களை சரியாக பராமரித்து வருவதன் மூலம் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க முடியும். இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டம் மேலூரில் நாளை (செவ்வாய்க்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில் புதிய திட்டம்? அமைச்சர் பேட்டி!

இதன் காரணமாக உறங்கான்பட்டி, தொழிற்பேட்டை, இளமனூர், வரிச்சியூர், ஓடைப்பட்டி, களிமங்கலம், சக்குடி, விளத்தூர், ராஜாக்கூர், சக்கிமங்கலம், கார்சேரி, குன்னத்தூர், நாட்டார்மங்கலம், தச்சநேந்தல், செங்கோட்டை, இஸ்லானி, மீனாட்சிபுரம், செவல்பட்டி, சுப்ரமணியபுரம், கொட்டாகுளம், சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நரசிங்கப்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பூஞ்சுத்தி, சுண்ணாம்பூர், ஆமூர், இடையப்பட்டி, எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, மேலவளவு, பட்டூர், ஆலம்பட்டி, சாணிப்பட்டி, கேசம்பட்டி, புலிப்பட்டி, அரிட்டாபட்டி, அ. வல்லாலபட்டி, திருவாதவூர், கட்டையன்பட்டி, கொட்டக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!