தமிழகத்தில் நாளை மறுநாள் (ஜூலை 21) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஜூலை 21) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஜூலை 21) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஜூலை 21) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் வாசுதேவநல்லூர் பகுதிகளில் உள்ள துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை அறிவிப்பு

தற்போது தமிழகத்தில் பருவமழை காலம் என்பதால் அவ்வப்போது மின்கம்பங்களில் மின்னிணைப்பு துண்டிப்பு, மின்கசிவு ஆகியவை ஏற்படுகின்றன. இது மட்டுமல்லாமல் மின்கசிவின் காரணமாக அறியாத விதமாக சில விபத்துகளும் ஏற்பட காரணமாகி விடுகின்றன. இதனால், அவ்வப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் மின்தடை அறிவிக்கப்பட்டு மின்கம்பங்களில் ஏதேனும் கோளாறுகள் இருக்கின்றதா என சரிபார்க்கப்படுகிறது. மேலும், மின்கசிவு ஏற்படா வண்ணம் வயர்களும் மாற்றப்படுகின்றன.

சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் சர்ச்சை கேள்வி – அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை!

அந்த வகையில் கடையநல்லூர் மின் கோட்டத்துக்கு உட்பட்ட நாரணபுரம் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அந்த பகுதியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மின்வாரியம் அறிவித்துள்ள மின்னிறுத்தம் செய்யப்படவுள்ள பகுதிகள் இதோ, தரணிநகர், வாசுதேவநல்லூர், சங்கனாபேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழபுதூர், நெல்கட்டும்செவல், சுப்பிரமணியபுரம், வெள்ளாளங்கோட்டை, தாருகாபுரம் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும், மலையாங்குளம், கலிங்கப்பட்டி, திருவேங்கடம் ஆகிய துணை மின் நிலையங்களிலும் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் மலையாங்குளம், சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, கலிங்கப்பட்டி, திருவேங்கடம், சத்திரப்பட்டி, உமையத்தலைவன்பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம், சென்னிகுளம், பாறைப்பட்டி, பருவக்குடி, கரிசல்குளம், ரெங்கசமுத்திரம், ஆலமநாயக்கம்பட்டி, மகாதேவர்பட்டி, குறிஞ்சாகுளம், புதுப்பட்டி, ஆவுடையார்புரம், குண்டப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்விநியோக சொற்பொறிவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!