தமிழகத்தில் ‘இவர்களுக்கு’ முதியோர் நிதியுதவி கிடையாது? அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் எக்கச்சக்கமான முதியோர்கள் அரசின் உதவித்தொகை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், குறிப்பிட்ட சில முதியோர்களுக்கு நிதியுதவி கிடையாது என தமிழக அரசு திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
முதியோர் நிதியுதவி:
தமிழகத்தில் எந்தவித ஆதரவும் இல்லாமல் தனித்திருக்கும் முதியோர்களுக்கு தமிழக அரசின் சார்பில் மாதந்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. முதியோர்களுக்கு மட்டுமல்லாமல் விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் 2 சமையல் எரிவாயு உருளை வைத்திருக்கும் முதியோர்களுக்கு இனி நிதியுதவி வழங்கப்படாது என தமிழக அரசு திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் 2 சமையல் எரிவாயு உருளை தான் பயன்பாட்டில் இருக்கின்றது. இந்நிலையில், 1 சமையல் எரிவாயு உருளை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே நிதியுதவி வழங்கப்படும் என்பதால் 2 சமையல் எரிவாயு உருளையில் ஒன்றை திரும்ப ஒப்படைக்கும்படியான நிலைமைக்கு முதியோர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆனாலும், ஒரு சமையல் எரிவாயு உருளையை மட்டும் ஒப்படைக்க முடியாது. 2 உருளைகளையும் திரும்ப ஒப்படைத்துவிட்டால் மட்டுமே ரூ. 900 வழங்கப்படுகிறது. இதன் பின்பு கூடுதல் எரிவாயு உருளையை பெற விரும்பும் முதியவர்கள் ரூ. 2500 செலுத்தி தான் சிலிண்டர் உருளையை பெற முடியும்.
தமிழகத்தில் இலவச பேருந்து சேவை? சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏற்பாடு!
இதனால், உதவித்தொகை பெற்று வந்த முதியவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால், அரசின் இந்த அறிவிப்பை மாற்றியமைக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் அரசுப் பணியில் உள்ளவர்கள், ரூ. 1 லட்சத்துக்கும் மேல் சொத்து பரிமாற்றம் செய்த முதியவர்கள், சர்க்கரை மற்றும் என் குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் ரூ. 1 லட்சத்துக்கு மேல் நகைக் கடன் பெற்ற முதியவர்களுக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கப்படாது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.