தமிழகத்தில் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உண்ணாவிரதம் – நீடிக்கும் பணி நியமன கோரிக்கை!
தமிழகத்தில் முன்னதாக ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் தங்கள் பணி நியமன கோரிக்கையை வலியுறுத்தி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீடிக்கும் கோரிக்கை:
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற அரசின் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டியது கட்டாயம். தனியார் பள்ளிகளும் இந்த தேர்வின் மதிப்பெண்களை வைத்து ஆசிரியர்களை நியமனம் செய்து கொள்வதும் உண்டு. முன்னதாக ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வயது வரம்பு அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தொடர்ந்து வைக்கப்பட்டு வந்த கோரிக்கைகளினால் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற சான்றிதழானது வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், கடந்த 2013ம் ஆண்டு முதல் 2019 வரை ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான பணி நியமனம் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. இதில் தேர்ச்சி அடைந்தவர்கள் தங்களின் பணி நியமனம் கோரி அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அப்போதைய தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் ஒரு நியமன தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று அரசு ஆணை வெளியிட்டிருந்தது.
தமிழகத்தில் அக். 7 இந்த பகுதிகளில் மின்தடை – பொதுமக்களே அலர்ட்!
Exams Daily Mobile App Download
அரசின் இந்த 149 ஆணையை ரத்து செய்து, தங்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்தி நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலக்கூட்டமைப்பு சார்பில் 500-க்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும், தற்போதுள்ள வயது வரம்பை தளர்த்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த ஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய வாசகங்களின் அட்டையை கழுத்தில் தொங்க விட்டு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்