தமிழகத்தில் 4ம் தேதி முதல் கத்திரி வெயில் தொடக்கம் – வெயில் 113 டிகிரியை தாண்ட வாய்ப்பு! அச்சத்தில் பொதுமக்கள்!
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாளை முதல் கத்திரி வெயில் காலம் தொடங்க உள்ளது. இந்த ஆண்டு கத்திரி வெயில் காலத்தில், வெயில் 113 டிகிரியை தாண்ட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கத்திரி வெயில்
தமிழகத்தில் கோடை காலம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடங்கியுள்ள நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிக வெப்பம் நிலவி வருகிறது. இதில் குறிப்பாக சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் வெப்பம் பதிவாகியுள்ளது. அத்துடன் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே இந்த சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் நாளை முதல் கத்திரி வெயில் தொடங்க உள்ளது. அதனால் தமிழகத்தில் 113 டிகிரியை வெயில் தாண்ட வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இது 25 நாட்கள் நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த நாட்களில் சூரியன் அதிக அளவு வீரியமிக்கதாக மாறும். அத்துடன் பூமியும் அதிக உஷ்ணத்தை கிளப்பும். அதன்படி தமிழ்நாட்டில் கத்திரி வெயில் தொடங்கும் போது அதிகமான வெப்பம் நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இப்பொழுதே பல இடங்களில் அதிகமான வெப்பம் நிலவி வருகிறது. இந்த நிலையில் நாளை கத்திரி வெயில் தொடங்கினால் சராசரியான வெப்பநிலை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் தடுப்பூசி போடுவது கட்டாயமில்லை – உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு!
தமிழகத்தில் கடந்த கத்திரி வெயில் காலத்தில் சென்னையில் அதிகபட்சமாக 106 டிகிரி வெயில் வரை சுட்டெரித்தது. இதே போல் வேலூரில் குறைந்தபட்சமாக 108 டிகிரி முதல் அதிகபட்சமாக 111 டிகிரி வரை பதிவாகியுள்ளது. மதுரையில் 2021ம் ஆண்டு வரை குறைந்த பட்சமாக 104 டிகிரி முதல் அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெயில் பதிவாகியுள்ளது. அதன்படி இந்த ஆண்டு மே மாதம் 113 டிகிரியை தாண்ட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெயில் தாக்கம் காரணமாக பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவார்கள்.