தமிழகத்தில் வருகிற 12ம் தேதி சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல அனுமதி ரத்து – வனத்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் பக்தர்கள் நலன் கருதி வனத்துறையினர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
சதுரகிரி மலை
தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்று காரணமாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் பிரதோஷம், பவுர்ணமி தினத்தன்று பக்தர்கள் வருகை புரிவார்கள். ஆனால் தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலுக்கு செல்லும் மலை பகுதிகளில் ஓடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அத்துடன் சுமார் 4,500 அடி உயரத்தில் உள்ள இந்தக் கோயில் 4 திசைகளிலும் மலைகளால் சூழப்பட்டுள்ளது அதனால் எந்த நேரத்திலும் இங்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கிடையே வருகிற 11ம் தேதி அன்று பௌர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. இந்த தினத்தில் பக்தர்கள் வெளி ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். இந்த நிலையில் பெய்து வரும் சாரல் மழை காரணமாக பக்தர்கள் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர் ஆகணும்னு கனவு இருக்கா? இதோ அரிய வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க!
இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சதுரகிரி கோவிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இன்று முதல் வருகிற 12ம் தேதி வரை பக்தர்கள் மலையேற தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த நாட்களில் மலை அடிவார பகுதியான தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பெய்து வரும் சாரல் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.