தமிழகத்தில் பள்ளி வாகனங்களில் ‘இது’ இருந்தால் மட்டுமே இயங்க அனுமதி – ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் வருகிற ஜூன் 13 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தொடர்ச்சியாக பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தமிழக அரசு அதற்கான முன்னேற்பாடுகளாக பல முயற்சிகளை செய்து வருகிறது. அவற்றில் இன்று மாவட்ட ஆட்சியர் பள்ளி வாகனங்களை குறித்து மேற்கொண்டுள்ள புது முயற்சி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஆட்சியர் ஆய்வு :
கடந்த 2 ஆண்டுகளாக நாட்டை புரட்டி போட்ட கொரோனா வைரஸ் இந்த ஆண்டும் மீண்டும் உருவெடுத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. பரவலின் தாக்கம் குறைந்த சமயத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு தேர்வுகளும் நடந்து முடிந்த கையோடு கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டது. மேலும், பள்ளிகள் திறப்பு குறித்து ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஜூன் 13 என தெரிவித்திருந்தார்.
ஜூன் 30 வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை – ஜூலை 1ம் தேதி மீண்டும் திறப்பு!
அதன் படி வருகிற திங்கட்கிழமை தமிழகத்தில் அனைத்து அரசு மாற்று அரசு உதவி பெரும் பள்ளிகள் செயல்படவுள்ளது. மேலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதியும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பள்ளிகள் திறக்கும் முன்பு முன்னேற்பாடுகளாக பல புது அம்சங்களை செயல்படுத்தி வருகிறது.
அதில் ஒன்றாக தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து பள்ளி வாகனங்களையும் இன்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். அதாவது எல்லா பள்ளிகளிலும் செயல்படும் வாகனங்களில் கேமரா மற்றும் வேகக்கட்டுப்பாடு சாதனம் இருந்தால் மட்டுமே அதனை இயக்க அனுமதி கொடுக்கப்படும என தூத்துக்குடி ஆட்சியர் தெரிவித்தார். இதனால் ஆட்சியர் நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வாகனங்களை ஆய்வு செய்தார்.