தமிழகத்தில் 15 வயதிற்கு மேற்பட்டோர் கவனத்திற்கு – அமைச்சர் முக்கிய தகவல்!

0
தமிழகத்தில் 15 வயதிற்கு மேற்பட்டோர் கவனத்திற்கு - அமைச்சர் முக்கிய தகவல்!
தமிழகத்தில் 15 வயதிற்கு மேற்பட்டோர் கவனத்திற்கு - அமைச்சர் முக்கிய தகவல்!
தமிழகத்தில் 15 வயதிற்கு மேற்பட்டோர் கவனத்திற்கு – அமைச்சர் முக்கிய தகவல்!

தமிழகத்தில் 15 வயதிற்கும் மேற்பட்ட பள்ளி செல்ல வாய்ப்பில்லாதவர்கள் நலன் கருதி அவர்களுக்கு உதவி புரியும் வகையில் தன்னார்வலர்கள் மூலம் கல்வி கற்பிக்கும் பணியும் நடந்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து முக்கிய தகவலை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

எழுத்தறிவு அளிக்க இலக்கு:

கொரோனா பேரிடர் காலத்தில், பள்ளிகள் இயங்காமல் இருந்த நிலையில், பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டதோடு கற்றல் இடைவெளியும் ஏற்பட்டதை சரி செய்திட தமிழக அரசால் ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த திட்டத்தில் 2 லட்சம் தன்னார்வலர்கள் 34 லட்சம் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் கல்வி கற்பித்து வருகின்றனர். மேலும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் மாபெரும் ஆதரவு, இத்திட்டத்தை வெற்றித் திட்டமாக மாற்றியுள்ளது. முதல்‌‌ கட்டமாக 12 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட இத்திட்டம் ஒரு மாதத்தில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.

Exams Daily Mobile App Download

இத்திட்டத்தில், தன்னார்வலர்களின் கல்வித் தகுதி‌, ஆர்வம், குழந்தைகளைக் கையாளும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தன்னார்வலர்களாக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. மேலும், வாசிப்புப் பழக்கத்தை குழந்தைகளிடம் வளர்க்கும் நோக்கத்தில் 1000 இல்லம் தேடிக் கல்வி மைய நூலகங்கள் தொடங்கப்பட்டன. ஒவ்வொரு நாளும் மாலை 11/2 மணி நேரம் மாணவர்கள் மகிழ்வுடன் கற்கும் வகையில் இல்லம் தேடிக் கல்வி மையங்கள் நடைபெறுகின்றன.

அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு முடிவு!

இந்நிலையில் விருதுநகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசிய போது, 15 வயதிற்கும் மேற்பட்ட பள்ளி செல்ல வாய்பில்லாதவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் கல்வி கற்பிக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் கடந்த ஆண்டு 3.10 லட்சம் பேருக்கு எழுத்தறிவு அளிக்க இலக்கு நிர்ணயம் செய்தோம். ஆனால் இலக்கை தாண்டி 3.19 லட்சம் பேருக்கு எழுத்தறிவு அளிக்கப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டில் 4.80 லட்சம் பேர் என்ற இலக்கு தாண்டி முடிக்கப்படும். இத்திட்டத்திற்கு ரூ.9.83 கோடியை முதல்வர் ஒதுக்கி உள்ளார் என்று கூறினார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!