தமிழகத்தில் இளங்கலை பட்டப்படிப்புகளில் தமிழ் பாடம் கட்டாயம்? உயர்கல்வித்துறை அதிரடி!
தமிழகத்தில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ் மொழியினை மாணவர்கள் அனைவரும் கற்க வேண்டும் என்பதற்காக உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
உயர்கல்வித்துறை உத்தரவு
தமிழகத்தில் தமிழ் மொழிப்பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு பணியிடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று தமிழ் மொழி தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் TNPSC தேர்வாணையம் நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழிப்பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி இத்தேர்வில் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தேர்வின் அடுத்த பகுதிகள் மதிப்பீடு செய்யப்படுகிறது.
இதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்புகளில் 2வது செமஸ்டர் தேர்வில் தமிழ் மொழிப்பாடம் கட்டாயம் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் 12ம் வகுப்பில் உருது, பிரெஞ்சு பாடப்பிரிவுகளை முதல் பாடமாக எடுத்து படித்தவர்கள் கல்லூரிகளில் தமிழ் படிக்க மிகவும் சிரமப்படுவார்கள். இந்த நிலையில் சில கல்லூரிகளில் தமிழ் பாடங்களை பேராசிரியர்கள் நடத்தாமல் இருப்பதாக மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
Post Office கணக்கு தொடங்கவுள்ளோர் கவனத்திற்கு – அதிக வட்டி தரும் சேமிப்பு திட்டங்கள்!
இது தொடர்பாக உயர்கல்வித்துறை செயலாளர் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் அனைத்து விதமான கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழிப்பாடம் கட்டாயமாகும். ஆனால் இதிலிருந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்களுக்கு விலக்கு அளிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து மற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழி பாடத்திற்கான தேர்வுகள் முறைப்படி நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்