தமிழகத்தில் அக்.15ம் தேதிக்குள் ரேஷன் பொருட்கள் ‘இந்த’ முறையில் வழங்க நடவடிக்கை – அமைச்சர் பேட்டி!

0
தமிழகத்தில் அக்.15ம் தேதிக்குள் ரேஷன் பொருட்கள் 'இந்த' முறையில் வழங்க நடவடிக்கை - அமைச்சர் பேட்டி!
தமிழகத்தில் அக்.15ம் தேதிக்குள் ரேஷன் பொருட்கள் 'இந்த' முறையில் வழங்க நடவடிக்கை - அமைச்சர் பேட்டி!
தமிழகத்தில் அக்.15ம் தேதிக்குள் ரேஷன் பொருட்கள் ‘இந்த’ முறையில் வழங்க நடவடிக்கை – அமைச்சர் பேட்டி!

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மலிவான விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தகுதியான நபர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்க அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

ரேஷன் பொருட்கள்

தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் பயன் அடையும் விதத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் மலிவான விலையில் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ரேஷன் பொருட்களை தகுதியற்ற நபர்கள் பெற்று கள்ள சந்தைகளுக்கு அதிக லாபத்திற்கு விற்பனை செய்வது சோதனையில் கண்டறியப்பட்டது. அதனால் இதனை தடுக்க கூட்டுறவுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முதற்கட்ட நடவடிக்கையாக பயோமெட்ரிக் முறை அனைத்து ரேஷன் கடைகளிலும் அமல்படுத்தப்பட்டது.

IBPS Clerk Mains 2022 தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு –  முழு விவரங்கள் இதோ!

இந்த பயோமெட்ரிக் முறையில் உணவு பொருட்கள் அனைத்தையும் ரேஷன் கார்டுதாரர்கள் கைரேகை பதிவு செய்த பிறகு விநியோகிக்கப்படுகிறது. இதன் மூலமாக ரேஷன் பொருட்கள் தகுதியான நபர்களுக்கு வழங்குவது உறுதியாகிறது. ஆனால் இந்த முறையால் வயதானவர்களுக்கு சரிவர தங்களின் கைரேகை பதிவு செய்ய முடிவதில்லை. அதனால் ரேஷன் பொருட்களை வழங்குவதில் கால தாமதம் ஏற்படுகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைக்கு வர முடியாததால், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

இது போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மாற்று முறை மூலமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி தகவல் தெரிவித்துள்ளார். இவர் கூறியதாவது, தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மின்னணு பதிவேட்டில் கோளாறு ஏற்படுவதால் கண் கருவிழி பதிவு மூலம் ரேசன் அட்டை தாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் வருகிற அக்டோபர் 15ம் தேதிக்குள் ரேஷன் பொருட்கள் கருவிழி பதிவு மூலம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!