தமிழகத்தில் அரசு வேலை கனவுடன் 73 லட்சம் பேர் காத்திருப்பு – மாநில வேலை வாய்ப்புத் துறை தகவல்!
தமிழகத்தில் அரசு வேலை வேண்டும் என்ற கனவுடன் பள்ளி, கல்லூரி முடித்த மாணவர்கள் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பித்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு விண்ணப்பித்துள்ளவர்கள் இன்றைய நிலவரப்படி 73 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வேலைவாய்ப்பு தகவல்:
அரசு வேலை என்றாலே தனி மரியாதை உண்டு, அதற்கு காரணம் அரசு துறை வேலை நிரந்தரமான ஒன்றாக இருக்கிறது. அதனால் பலர் அரசு வேலை வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கின்றனர். மேலும் அரசு வேலைக்காக நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் லட்சக்கணக்கில் விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. அது மட்டுமில்லாமல் பள்ளி கல்லூரி முடித்த பின் அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைவாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர். இந்நிலையில் இன்றைய நிலவரப்படி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 73.99 லட்சம் பேர் காத்திருப்பதாக மாநில வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதில் ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் அடங்குவர். தமிழக அரசும் பல துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு அதில் முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது.
நாட்டிலேயே மருத்துவ காப்பீட்டு சிகிச்சையில் தமிழகம் முதல் இடம் – மத்திய அரசு அறிக்கை!
Exams Daily Mobile App Download
ஆனாலும் இன்னும் இத்தனை பேர் காத்திருப்பு பட்டியலில் இருப்பதால் அவர்களின் எதிர்காலம் மற்றும் அரசு வேலை கனவு எட்டா கனியாகவே இருக்கிறது. இந்நிலையில் சுமார் 73 லட்சத்திற்கு அதிகமானோர் இந்த பட்டியலில் இருப்பதால் முன்னுரிமை அடிப்படையில் வேலையை எதிர்பார்க்காமல், போட்டித் தேர்வுகள் மூலமாக விண்ணப்பித்து அதில் தேர்வாகி அரசு வேலை வாங்குவதே சிறந்த முறையாக இருப்பதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்