வானில் மார்ச் 28 ஆம் தேதி தோன்றும் அதிசய காட்சி – மக்கள் வெறும் கண்ணில் 5 கிரகங்களை பார்க்கலாம்!
வானில் வரும் மார்ச் 28 ஆம் தேதி அதிசய நிகழ்வு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதிசய நிகழ்வுகள்
இயற்கை அதிசயத்தின் விளைவாக மார்ச் 28 ஆம் தேதி வானில் ஒரு அதிசய நிகழ்வு நடைபெற இருக்கிறது. அதாவது அன்று இரவு நிலவு உட்பட 5 கிரகங்கள் வேனில் தெரியும் என தகவல் வெளியாகி இருக்கிறது. அதுவும் இந்த ஐந்து கிரகங்களும் நேர் கோட்டில் இருக்காமல் ஆர்ச் போல காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஃபாக்ஸ் நியூஸ் வெளியிட்ட அறிக்கையின் படி, வருகிற மார்ச் 28 ஆம் தேதி மாலை சூரியன் மறைந்த பின் வானில், செவ்வாய், வியாழன், வீனஸ், புதன் மற்றும் யுரேனஸ் ஆகிய கிரகங்களை பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை வரை (மார்ச் 26) டிரோன்கள் பறக்கத் தடை – இது தான் காரணம்!
மேலும் தற்போது வெளியான தகவலின் படி, வியாழன் புதன் கோளை விட பிரகாசமாக காணப்படும் எனவும், வீனஸ் அனைத்து கிரகங்களை விட பிரகாசமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வியாழன் மற்றும் புதனின் மேல் இடதுபுறத்தில் வீனஸ் பிரகாசமாக இருக்கும் என லைவ் மிண்ட் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வின் போது வீனஸ் கிரகத்தை வெறும் கண்ணால் பார்க்க முடியும் எனவும் இந்த 4 கிரகங்களில் யுரேனஸ் பார்க்க கடினமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் வீனஸுக்கு அருகில் தோன்றும், ஆனால் மிகவும் மங்கலாக இருக்கும் எனவும், செவ்வாய் கிரகமும் வானத்தில் மிக உயரமாகத் தோன்றும் மற்றும் குறிப்பிடத்தக்க சாயலைக் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
Exams Daily Mobile App Download
Follow our Instagram for more Latest Updates