இந்தியாவில் ஒரே நாளில் 38,667 பேருக்கு கொரோனா – 478 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,667 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 478 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா நிலவரம் :
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 38,667 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,21,56,493 ஆக அதிகரித்துள்ளது. தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கூட வைரஸ் பரவல் முழுமையாக குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பால் இந்தியா முழுவதும் 478 பேர் உயிரிழந்துள்ளனர்.
கண்ணன், ஐஸ்வர்யாவின் நிலைமையை கண்டு சந்தோசப்படும் பிரஷாந்த் – அடுத்த எபிசோட்!
இதுவரை மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,30,732 ஆக உயர்ந்துள்ளது. அதிகரிக்கும் உயிரிழப்புகள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக இந்தியாவில் அனைத்து ,மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசிகள் 2 டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்று பாதிப்பில் இருந்து நம்மை காக்கிறது என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கிறது. நேற்று மட்டும் நாடு முழுவதும் 63,80,937 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 31 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – நாளை முதல் அமல்!
தற்போது வரை 53,61,89,903 பேர் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று ஒரே நாளில் 35,743 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர் . இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,13,38,088 ஆக உயர்ந்துள்ளது. மேலும் குணமடைந்தோர் விகிதம் 97.46% ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 3,87,673 பேர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.20% என்ற நிலையில் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.