இந்தியாவில் ஒரே நாளில் 16,299 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியை கடந்துள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரத்தை பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் சில தகவல்களை பார்ப்போம்.
கொரோனா பரவல்
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை நாட்டில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. இதே போல் இதுவரை தொற்றால் 4 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனாவால் பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகிதம் குறித்த அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 16,299 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
இதையடுத்து இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,42,06,996 ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து நாட்டில் கொரோனாவால் புதிதாக 54 பேர் இறந்துள்ளனர். அதன்படி இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,26,879 ஆக உயர்ந்துள்ளது. இதனால் உயிரிழந்தோர் விகிதம் 1.19% ஆக குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று தொற்றில் இருந்து 19,431 பேர் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழக ரேஷன் கடைகளில் இனி தரமான அரிசி – அமைச்சர் பெரியசாமி தகவல்
இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,35,55,041 ஆக அதிகரித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக குணமடைந்தோர் விகிதம் 98.53% ஆக குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,25,076 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதன்படி ஒரே நாளில் 25,75,389 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நாட்டில் 2,072,946,593 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.