ஒரே ஆண்டில் அரசுப் பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 16% முன்னேற்றம் – மாநில அமைச்சர் பெருமிதம்!

0
ஒரே ஆண்டில் அரசுப் பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 16% முன்னேற்றம் - மாநில அமைச்சர் பெருமிதம்!
ஒரே ஆண்டில் அரசுப் பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 16% முன்னேற்றம் - மாநில அமைச்சர் பெருமிதம்!
ஒரே ஆண்டில் அரசுப் பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 16% முன்னேற்றம் – மாநில அமைச்சர் பெருமிதம்!

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில், டெல்லி அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் முன்பை விட 16 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ச்சி விகிதம்:

கடந்த இரண்டு வருடங்களாக பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கொரோனா பரவல் தாக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கு அகமதிப்பீடு முறையில் தான் இறுதி மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வந்தது. மேலும், நேரடி கல்வி முறையை மாணவர்கள் சில காலம் சந்திக்காமல் இருந்ததால் அவர்களின் கற்றல் திறன் குறைவடைய தொடங்கியது. மேலும்,கற்றல் இழப்புகளும் இருந்து வந்தது. ஆனால், 2021-2022ம் கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வுகள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளோடு மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.

இந்நிலையில், சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில், டெல்லி அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 16 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி 81.27 சதவீதத்தில் இருந்து 97.29 சதவீதமாகவும், 12ம் வகுப்பு தேர்ச்சி 96.29 சதவீதத்தில் இருந்து 98.21 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளுக்காக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 75 ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் இதுபோன்ற சிறப்பான முடிவுகளை இந்தியா கண்டதில்லை என்று கூறியுள்ளார்.

மாநில கல்லூரிகளில் 2024 முதல் 4 ஆண்டு இளங்நிலை படிப்பு அமல் – முதல்வர் அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

மேலும், கடந்த 2 ஆண்டுகளில் கோவிட் காரணமாக, மாணவர்களின் கல்வி மற்றும் நல்வாழ்வில் மோசமான தாக்கம் ஏற்பட்டது. இருப்பினும், மாணவர்கள் இறுதி தேர்வில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்று கூறினார். குறிப்பாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அவர்கள், மாணவர்கள் இந்த ஆண்டு தேர்வில் சிறப்பாக செயல்பட்டாலும், சிலர் ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெற முடியாமல் உள்ளனர். இவர்கள் துணை பொதுத்தேர்வில் மீண்டும் கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். இதனால் நிச்சயமாக அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரித்து, படிப்பில் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!