சென்னையிலும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு? – மாநகராட்சி ஆணையர் தகவல்!
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் அவர்கள் இன்று பொது நிகழ்ச்சி ஒன்றில் தேவை ஏற்படின் கோவையைப் போல் சென்னையிலும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.
கூடுதல் கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பரவல் கடந்த ஜூலை மாதம் முதல் குறைந்து வருகிறது. இதனால் கடந்த மே 10ம் தேதி முதன்முதலில் தொடங்கிய நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இறுதியாக அக்டோபர் 31ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் சில தளர்வுகளுடன் நீடிக்கப்பட்டுள்ளது. இது தவிர கொரோனா பாதிப்பு நிலவரத்துக்கு ஏற்ப மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் விதிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
செப்.19 (நாளை) தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் – ஆயத்த பணிகள் தீவிரம்!
இதனால் பாதிப்பு அதிகம் உள்ள கோவை மாவட்டத்தில் தொடர்ந்து கூடுதல் கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. மக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்நிலையில், முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் இன்று பங்கேற்றார். அதன்பிறகு அவர், இன்னும் ஒரு மாதத்தில் சென்னை முழுவதும் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
நாளை நடைபெறும் முகாம்கள் மூலம் 2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை தடுப்பூசி முகாமுக்கு வரும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து சென்னையில் பாதிப்பு அதிகமானால் கோவையை போல சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்குவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.