தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை – மாவட்ட கல்வி அதிகாரி சுற்றறிக்கை!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை - மாவட்ட கல்வி அதிகாரி சுற்றறிக்கை!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை - மாவட்ட கல்வி அதிகாரி சுற்றறிக்கை!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை – மாவட்ட கல்வி அதிகாரி சுற்றறிக்கை!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரி முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இது குறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தாளாளர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

செல்போனுக்கு தடை:

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொடர்பாக பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது 1 – 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிதம் மற்றும் எழுத்து திறனை மேம்படுத்தும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து ரீடிங் மாரத்தான், ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகள் போன்றவை கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்பிக்கும் நோக்கில் போதனை வகுப்புகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் மாணவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதாவது மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளி மாணவர்கள் அதிக அளவு ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் கொரோனா ஊரடங்கு வந்த பிறகு ஆன்லைன் வகுப்பிற்கு வேண்டும் என்று பெற்றோர்களே தங்கள் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போனை கொடுக்கின்றனர். இது கல்வியை தாண்டி மாணவர்களுக்கு சில தீமைகளை அளிக்கிறது. அதனால் பெற்றோர்கள் பள்ளிக்கு செல்போன் கொண்டு செல்வதை அனுமதிக்க கூடாது. இதனை மீறி வகுப்புக்கு செல்போன் கொண்டு வந்தால் திரும்பி வழங்கப்பட மாட்டாது என்று சென்னை மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

RVNL நிறுவனத்தில் காத்திருக்கும் Manager பணியிடம் – ரூ.2,80,000/- வரை ஊதியம் || உடனே விண்ணப்பியுங்கள் !

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட செய்தி குறிப்பில், பள்ளிக்கு வரும் மாணவர்கள் செல்போன் கொண்டு வருவதை தடுத்திடும் வகையில் வகுப்பு ஆசிரியர்களால் வாரத்தில் இருமுறை சுழற்சி அடிப்படையில் சோதனை செய்ய வேண்டும். மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் ஒழுக்கம் சார்ந்த செயல்பாடுகளில் எவ்வித சமரசத்திற்கும் இடம் அளிக்காமல் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எந்த வித தகவலும் இல்லாமல் தொடர்ந்து 3 நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களது விபரம் குறித்து பெற்றோரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!