இலங்கையில் வசிக்கும் இந்தியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை – வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்!

0
இலங்கையில் வசிக்கும் இந்தியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை - வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்!
இலங்கையில் வசிக்கும் இந்தியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை - வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்!
இலங்கையில் வசிக்கும் இந்தியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை – வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்!

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இந்த நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அந்நாட்டில் உள்ள இந்திய மக்களுக்கும், இலங்கை செல்ல உள்ள மக்களுக்கும் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

இந்தியர்களுக்கான அறிவுறுத்தல்

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நேரத்தில் தடுப்பு பணியாக அனைத்து நாடுகளும் ஊரடங்கு விதித்தது. இதனால் கடும் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டது. இதிலிருந்து மீண்டு வர அரசுகளை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற நாடுகளை தொடர்ந்து இலங்கை மிகவும் மோசமான நிலைக்கு ஆளானது பொருளாதார சரிவால் மருந்து பொருட்கள், சமையல் எரிவாயு, உனவு பொருட்கள், காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்தது.

தமிழக பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் – முக்கிய அறிவிப்பு இதோ!

அந்நாட்டு அரசுக்கு இறக்குமதி பொருட்களுக்கும் பணம் செலுத்த இயலாததால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடும் நிலவி வருகிறது. அதனால் அந்நாட்டில் சுமார் 60 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். இந்த நிலையில் இலங்கைக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், சர்வதேச நிதி அமைப்பும், உலக வங்கி போன்றவைகளும் நிதிகளை வழங்கி வருகிறது. மேலும் பொருளாதாரத்தை மீட்க அதிபர் ரணில் தலைமையிலான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியாவின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், இலங்கையில் உள்ள இந்தியர்களும் அல்லது இலங்கை செல்ல நினைக்கும் இந்தியர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும் இலங்கை பயணத்திற்கு முன்பு ரூபாய் நோட்டுகளை மாற்றுவது மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து காரணிகள் குறித்தும் அவர்கள் நன்றாக ஆய்வு செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். தற்போது நாட்டில் விரும்பத்தகாத நிகழ்வுகளை தடுக்கவே இததகைய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!