தமிழகத்தில் தங்கும் விடுதிகளுக்கான முக்கிய எச்சரிக்கை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் தங்கும் விடுதிகளுக்கான முக்கிய எச்சரிக்கை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் தங்கும் விடுதிகளுக்கான முக்கிய எச்சரிக்கை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் தங்கும் விடுதிகளுக்கான முக்கிய எச்சரிக்கை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழகத்தில் தற்போது அனைத்து குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் விடுதிகளை முறையாக பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் விடுதிகளை முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

விடுதிகள்:

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் படி அனைத்து குழந்தைகள் மற்றும் பெண்கள் விடுதிகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் 18 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் விடுதிகளை, மாவட்ட சமூக நலத்துறையில் பதிவு செய்ய வேண்டும். அதே போல மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் விடுதிகளை அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டியது அவசியம். தற்போது இணையதளம் வாயிலாக உரிமம் பெறும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் சட்டப்படி தங்கும் விடுதிகள் பதிவு செய்யப்படவில்லை என்றால் அந்த விடுதி மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அண்மையில் கள்ளக்குறிச்சி மாவட்ட தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தியது. மாணவி மரணம் குறித்த வழக்கு விசாரணையில் மாணவி தங்கியிருந்த விடுதி அதாவது பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வந்த விடுதிக்கு முறையாக அனுமதி பெறவில்லை என்பது தெரிய வந்துள்ளது.இதையடுத்து பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கனமழை காரணமாக மின்தடை? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

தற்போது விடுதிக்கு உரிமம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். அதன் பிறகே அனுமதி வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் உள்ள விடுதிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் தங்கும் தனியார் விடுதிகளை முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அறிவிப்பின்படி, விடுதிகளை முறைப்படி பதிவு செய்யாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை ஆட்சியர் விடுத்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!