அரசு ஊழியர்களுக்கான முக்கிய எச்சரிக்கை – மீறினால் அபராதம்!

0
அரசு ஊழியர்களுக்கான முக்கிய எச்சரிக்கை - மீறினால் அபராதம்!
அரசு ஊழியர்களுக்கான முக்கிய எச்சரிக்கை - மீறினால் அபராதம்!
அரசு ஊழியர்களுக்கான முக்கிய எச்சரிக்கை – மீறினால் அபராதம்!

அரசு ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்து புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் விதிகளை பின்பற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

அரசு ஊழியர்கள்:

அரசாங்கத்திற்கு உறுதுணையாக இருப்பதில் பெரும்பங்கு அரசு ஊழியர்களை சார்ந்ததாகும். அரசின் பணிகளில் முக்கிய பங்கு அந்த அரசாங்கத்திற்கு கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்களை சாரும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு நல்ல சலுகைகளை அரசானது வழங்கி வருகிறது. மேலும் அரசு ஊழியர்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் இருந்து தான் ஊதியம் அளிக்கப்படுகிறது. இதனால் அரசு ஊழியர்கள் தங்களது தரமான சேவையை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பது இன்றியமையாத ஒன்றாகும்.

ஷூட்டில் கொடுக்கப்படும் உணவை ஒரு பிடி பிடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா – வைரலாகும் வீடியோ!

அந்த வகையில் அரசு ஊழியர்கள் அரசால் வழங்கப்படும் சேவையின் போது மக்களுக்கு மகிழ்ச்சியுடன் சேவை செய்ய வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனை மீறும் ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினை பிலிப்பைன்ஸில் உள்ள முலோனேயில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் மேயர் அரிஸ்டாடில் அகுயர் அரசாங்கத்தால் வழங்கப்படும் சேவையில் புதிய மாற்றத்தை கொண்டு வர முயற்சித்து வருவதாக கூறியுள்ளார். இந்த நிலையில் தான் இப்படி ஒரு அறிவிப்பினை அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும், சமீபத்தில் தென்னை விவசாயிகள், மீனவர்கள் தங்கள் வரியை செலுத்த சென்றிருந்த போது டவுன் ஹால் ஊழியர்களால் மோசமாக நடத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து புகார்கள் எழுந்ததால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நியூ ஸ்ட்ரெய்டில் டைம்ஸ் படி அகுய்ரே பிலிப்பைன்ஸ் நாட்டு அரசாங்க அணுகுமுறையை மாற்ற விரும்பி அரசு ஊழியர்களுக்கு இந்த அறிவிப்பினை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை பின்பற்ற தவறும் பட்சத்தில் ஆறு மாத சம்பளத்திற்கு இணையான அபராதம் அல்லது வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த ஸ்மைல் கொள்கையின் கண்காணிப்பை மனித வள குழு ஆய்வு செய்யும் என்று மேயர் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!