வாட்ஸ் ஆப் பயனர்கள் கவனத்திற்கு – முக்கிய அப்டேட் வெளியீடு!
இந்தியாவில் வாட்ஸ் ஆப் நிறுவனம் முக்கிய தகவலை வெளியிட்டு உள்ளது. வாட்ஸ் ஆப் நிறுவனம் பயனர்களிடம் இருந்து வந்த புகாரின் அடிப்படையில் பலரது கணக்குகளை முடக்கி உள்ளது. மேலும் இது குறித்த முழு விவரத்தையும் கீழே பார்ப்போம்.
வாட்ஸ் ஆப் நிறுவனம்:
உலகத்தில் இன்றைய காலகட்டத்தில் உள்ள மக்களுக்கு வாட்ஸ்அப் அனைவருக்கும் ஒரு இன்றியமையாத மொபைல் செயலி ஆகிவிட்டது. இதில் பயனர்களுக்கு பல அற்புதமான திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இந்த செயலியின் மிக முக்கியமான அம்சங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த அம்சங்களைப் பயன்படுத்தினால், அதன் பின் பயனாளிகள் வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்தும் முறையை மாற்றி விடுவார். மேலும் ஒரு சில காலத்திற்கு முன்பு வெளியிடப்பட்ட இந்த செயலியை பயனர்களும் மிகவும் விரும்புகின்றனர். இந்த அம்சத்தின் உதவியுடன், வாடிக்கையாளர்கள் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்பில் இருந்து வாட்ஸ்அப்பில் வரும் குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை ஏற்று பேசி கொள்ளலாம்.
TN Job “FB
Group” Join Now
இந்த நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் பல சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆனாலும், கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 18.05 லட்சம் வாடிக்கையாளர்களின் கணக்குகளை முடக்கி உள்ளது. மேலும் பயணிகளிடம் இருந்து வந்த புகாரின் அடிப்படையில் வாட்ஸ் அப் நிறுவனம் இந்த காரியத்தை செய்து உள்ளது. மேலும் மாதந்தோறும் பயனர்களிடம் இருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்து வருகிறது.
PM KISAN பயனாளிகளின் பட்டியலை சரிபார்ப்பது எப்படி? முழு விவரம் இதோ!
இந்த நிலையில் மேலும் பிப்ரவரி மாதத்தில் 14.26 லட்சம் இந்திய பயனர்களின் கணக்குகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் முடக்கியது. அதற்கான முக்கிய காரணங்கள் பயனர்களிடம் இருந்து எழுந்த புகாரின் அடிப்படையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலான தரவுகளைப் பகிரும் கணக்குகளையும் வாட்ஸ் ஆப் நிறுவனம் முடக்கி வருகிறது. அதனால் வாட்ஸ் ஆப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் முன் எச்சரிக்கையுடன் பயன்படுத்துமாறு வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.