சர்வதேச விமான பயணிகளுக்கு முக்கிய விதிமுறை அறிவிப்பு – பிப். 15 முதல் அமல்! டிஜிசிஏ அறிக்கை!

0
சர்வதேச விமான பயணிகளுக்கு முக்கிய விதிமுறை அறிவிப்பு - பிப். 15 முதல் அமல்! டிஜிசிஏ அறிக்கை!
சர்வதேச விமான பயணிகளுக்கு முக்கிய விதிமுறை அறிவிப்பு - பிப். 15 முதல் அமல்! டிஜிசிஏ அறிக்கை!
சர்வதேச விமான பயணிகளுக்கு முக்கிய விதிமுறை அறிவிப்பு – பிப். 15 முதல் அமல்! டிஜிசிஏ அறிக்கை!

சர்வதேச விமான பயணிகளின் முதல் வகுப்பில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்து அதை மாற்றினால், அவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் ஒரு பகுதி திருப்பி வழங்கப்படும் என டிஜிசிஏ வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

டிக்கெட் கட்டணம்:

இந்தியாவில் சர்வதேச விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு புது அறிவிப்பு ஒன்றை போக்குவரத்து ஒழுங்குமுறை பிரிவான டிஜிசிஏ வெளியிட்டுள்ளது. அதன் படி சர்வதேச விமானப் பயணிகளின் முதல் வகுப்பு பயணத்தை மாற்றினால் அவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் ஒரு பகுதி திருப்பி வழங்கப்படும். இந்த விதிமுறையானது வருகிற பிப் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது- பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

இந்த புது விதிமுறையின் படி சர்வதேச விமானப் பயணிகளின் முதல் வகுப்பு பயணத்தை மாற்றினால் அவர்களின் டிக்கெட் கட்டணத்தில் வரிகள் உள்பட 30 முதல் 75 சதவீதம் வரை நிறுவனம் திருப்பி அளிக்க வேண்டும். மேலும் 1,500 கி.மீ. குறைவான தொலைவு விமான பயண டிக்கெட்டுக்கு 30 சதவீதமும், 1,500 முதல் 3,500 கி.மீ. தொலைவு பயண டிக்கெட்டுக்கு 50 சதவீதமும், 3,500 கி.மீ.க்கும் மேல் உள்ள பயண டிக்கெட்டுகளுக்கு 75 சதவீதமும் பயணக் கட்டணம் திருப்பி அளிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!